கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

வியாழன், ஜூலை 28, 2005

என்ன சொல்லி என்னை சொல்ல... காதல் என்னை கையால் தள்ள

சாவி
வன்ன மலர்கள், வாழ்த்து அட்டைகள்,
இன்லன்ட் அஞ்சல்கள், ஈ-மெயில் கடிதங்கள்,
முகம் பார்த்து மூன்று முறை சொல்லியாயிற்று
இன்னும் உன் மௌன பூட்டை திறக்க
என் முச்சு மட்டும் தான் பாக்கி

நியுட்டன்
1.எல்லோர் இதயமும் அவரவர் சொற்படியே நடக்கும், காதல் வந்து மாற்றும் வரை.
2.ஊடலும், கூடலும் பெருக, பெருகும் காதல்
3.எல்லா காதலுக்கும், இனையான எதிர் காதல் உண்டு.

தலைப்புகள் இல்லாத தவங்கள்
# என்ன பிடிக்கும் என்னிடம்? என்றாய்
குழம்பினேன், தேனே பூவானால், தேனீக்கள் குழம்பதானே செய்யும்!

# 'உன் பேச்சுக்களை விட உன் மௌனம் பிடித்திருக்கிறது' என்றேன்
கோபித்து கொண்டு 'இனி உன்னிடம் பேசப் போவதில்லை" என்றாய்!!

நத்தை
உன் காதலையெல்லாம் ஓட்டினுள் ஒளித்து
ஊர்ந்து செல்ல வேண்டும் நான், நேர பாதையின் மீது.

இது என்ன மௌனம்
இது என்ன மௌனம்
தினம் என்னை கொல்லும்
புது வகை ஆயுதம்.
மறைத்தது போதும்
மனமெங்கும் இன்று
மறுபடி பூகம்பம்.

விழிகளெல்லாம் விடுகதையாய்,
விடை தெரியா தொடர்கதையாய்,
இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்தே மௌனமா?

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 2 (show/hide)

2 Comments:

Anonymous Anonymous said...

மிகவும் அருமை படிக்க படிக்க மனடினில் இனிமை பூக்கின்ரது

2/26/2006 3:22 PM  
Anonymous Anonymous said...

ரோம்ப நாள் கழித்து இங்கே வந்திருக்கீங்க...பேரை விட்டு போயிருக்கலாமே. நன்றி

By: nandhan

2/26/2006 3:45 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?