கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

ரங் தே பசந்தி - விமர்சனம்


குட்டி குட்டி டிரஸ் போட்ட பொண்ணு, பாஸ்ட் கார்ஸ், ஏழைகளே இல்லாத ஹிந்தி சினிமாவுல திடிர் திடிர்ன்னு ஒரு நல்ல படம் வந்துடும்.
40 வயசு அமிர்கான் காலேஜ் பையனா நடித்து, ராகேஷ் ஒம் ப்ரகாஷ் மெஹரா இயக்கத்தில் வந்து இருக்கும் ரங் தே பசந்தி அப்படி ஒரு படம்

கதையை அதிகம் சொல்ல வேண்டாம்.
இந்த காலத்து பசங்க. பீர், டிஸ்கோன்னு ஊர் சுத்தறவுங்க. நாடு, பொறுப்பு, சுதந்திரம் இதெல்லாம் கிலோ எவ்வளவு என்பாங்க. படத்துல வர ஒரு வசனம் மாதிரி - "ஸ்ம்ஸ் ஜேனரேஷன், 4 வரிக்கு மேல பேசுனா Lecture". இவங்க சுதந்திர போராளிகளை பற்றிய ஒரு Docu-Drama நடிக்க நேருது. முதலில் அதோட ஒன்ற மறுக்கிறார்கள். மெதுவாய், கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களுக்குள் இந்த உணர்வுகள் ஊற துவங்குது. திடிர்ன்னு நடக்குற ஒரு விபத்தால் இந்த உணர்வுகள் வெடித்து கிளம்ப, என்ன ஆகுது என்பது தான் கதை.

திரைக்கதை படத்தோட மிகப்பெரிய ப்ளஸ். சுதந்திர போரளிகளையும்-சமகால இளைஞர்கள் மீதும் மாறி மாறி பயனிக்கும் கதை. இரு வேறு காலகட்டதிற்கும் இடையிலான டிரான்சிஷன் கையாளுவது அவ்வளவு சுலபமில்லை. ஆரம்பத்தில் சறுக்கினாலும் கமலேஷ் பாண்டே நல்லாவே செய்திருக்கார். இரு கால கட்டதின் நரேஷனும் ஒன்றிப்போவது அழகு. இரு குழுக்களும் மனசால் ஒன்றிப்போன பின் திரையிலும் ஒன்றுவது பாரட்டப்பட வேண்டியது (மெஹராவுக்கு தானே?).
அது மட்டுமின்றி கதைக்கு தேவையில்லாமல் ஒரு காட்சியும் இல்லை. கதையின் கடைசியில் பயன்படுத்தபடும் கேரக்டர்கள் கூட முதல் 20 நிமிடத்திற்குள் அறிமுக படுத்தப்படுகிறார்கள்.

சுதந்திரம் மட்டுமல்ல சமகால பிரச்சனைகளை களையவும் இந்த நாடு தம் மக்களை எதிர்பார்க்கிறது, இதை நாம் தான் செய்யனும் என்ற வரையில் கதைக்களத்தை தேர்ந்து எடுத்திருப்பது உன்மையான முயற்சி. அதுவும் MiG Crash, ராணுவ தளவாட ஊழல், காவிக்காரர்களின் நியோ நாசியிசம் என மிக சமீப கால உதாரணங்கள் கதைக்கு வலு சேர்கின்றன. (சம்பந்தபட்டவர்கள் ஏதும் சொல்லவில்லையா?)

பரசூனின் வசனுமும் பாடல்களும் திரைக்கதைக்கு நல்ல சப்போர்ட். ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். 'ரங் தே பசந்தி' பாட்டு இன்னும் நிறைய நாள் பார்டிகளில் ஆடப்பெறும்.

கதையின் போக்கில் உறுத்தாமல் செல்லும் கேமரா டில்லியின் அழகை அள்ளி கொடுக்கிறது. வேகத்தை, இருட்டை, ப்ளாஷ்பேக்கையும் அற்புதமாய் கையாளுகிறார் பினோத் ப்ரதான்.

அமிர்கான் நம்ம ஊரு சித்தார்த்க்கு இனையா மஜா செய்யறார். அச்சரியமான இளமை. அவ்வளவு பெரிய ஸ்டார் இருந்தும் கதையை அவர் மேல் மட்டும் ஏற்றி வைக்காமல் அவரை ஒரு கேரக்டராக பாவித்திருப்பது நல்ல முதற்படி.அதே போல மற்றவர்களும் தமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சில குறைகளும் இருக்கதான் செய்கின்றன.
ஆரம்பத்தில் கோர்வையில்லாமல் சேரும் இருவேறு காலகட்டங்கள் தினிக்கபட்டதாய் தோன்றுகிறது. நடிப்பதில் அதுவும் சுதந்திர தியாகிகளாய் நடிப்பதில் சுத்தமாய் விருப்பம் இல்லாத இந்த இளைஞர்கள் தான் தமக்கு தேவை என டாகுமெண்ட்ரி இயக்குனர் முடிவு செய்தமைக்கான காரணத்தை தெளிவாய் சொல்லியிருக்கலாம். படத்தோட உச்சகட்டம், உன்மையாகவே 'உச்சகட்டமாய்' ஏனோ இல்லை. கிளைமாக்ஸ் இழுக்கபடாமல் இருந்திருக்கலாம், இல்லை கதையை முன்னடியே முடித்திருக்கலாம். கதாசிரியரின் கருத்துக்களை சொல்லவதற்காக் இழுத்தது போலிருக்கு. கேட்பதற்கு நன்றாயிருந்தாலும் கடைசியில் வரும் 'ரூபாரூ' பாட்டு ஒரு பெரிய ஸ்பீட் ப்ரேக்கர்.

இவ்வளவு தேளிவாய் கதை சொன்னவரு, கடைசியில 'டைரக்டோரியல் டச்' ஏன் வைத்தாரோ? ('இன்னைக்கு ஒரு விதை விதைத்தால் நாளைக்கு நிறைய் முளைக்கும்')

இது போன்ற சிறு குறைகளை தவிர்த்து பார்த்தால் 'ரங் தே பசந்தி' வரவேற்க பட வேண்டிய ஒரு நல்ல படம். பெரு நகரங்களிலும்,மல்டிப்ளெக்ஸ்களிலும் நன்றாய் ஓடினாலும் பெருவாரியான 'பொழுது போக்க' வரும் ரசிகர்களை கவுருமா என்பது சந்தேகம். UTVயின் மார்கெடிங் 'aggressive'ஆக இருக்கிறது. படம் ஓடினால் இது போல வளமான கதைகள் எடுக்க மற்றவர்களும் முன்வருவர். காத்திருப்போம்.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 15 (show/hide)

15 Comments:

Anonymous Anonymous said...

Wow, it s nice.. Actually I dont know Hindi... But after reading such a critics , I eagerly want to learn Hindi at least to watch such a good movies..
Hope people who know Hindi will support this film.. :-)

1/30/2006 10:11 PM  
Anonymous Anonymous said...

நானும் படம் பார்த்தேன்.நல்ல முயற்சி. வழக்கமான மசாலா படமாக இல்லாதது பாராட்டத்தக்கது. அமிர்கான், சித்தார்த் உட்பட அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அரைத்ததையே அரைத்து, எடுத்ததற்கெல்லாம் அருவாள் தூக்கும் நம்மூர் விஜய்,சிம்பு போன்ற மசாலா நடிகர்களும், டைரக்டர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

By: gayathri

1/31/2006 11:30 AM  
Blogger காயத்ரி said...

நானும் படம் பார்த்தேன்.நல்ல முயற்சி. வழக்கமான மசாலா படமாக இல்லாதது பாராட்டத்தக்கது. அமிர்கான், சித்தார்த் உட்பட அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அரைத்ததையே அரைத்து, எடுத்ததற்கெல்லாம் அருவாள் தூக்கும் நம்மூர் விஜய்,சிம்பு போன்ற மசாலா நடிகர்களும், டைரக்டர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

1/31/2006 11:31 AM  
Anonymous Anonymous said...

NRI எல்லாம் முட்டள் நு title card ல வருதாம்.really ?
நான் படம் பாக்கல. என்னொட friend சொன்னன்

BTW i am not distracting / writting convtroversy. just a confirmation.

By: karthikjayanth

1/31/2006 12:10 PM  
Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

1/31/2006 5:40 PM  
Blogger நந்தன் | Nandhan said...

கார்திக்ஜயந்த் - அப்படி எதுவும் போடலையே. இல்ல நான் தான் கவனிக்கலையோ? நான் இந்த படத்தை பார்த்து இந்தியாவில் இல்லை :) அதனால் அத மட்டும் எடிட் செய்திருப்பார்களோ?

காய்த்ரி : விஜய் சிம்பு எல்லாம் ஏங்க? அவங்க பாட்டுன்னு 'பொம்பளைன்னா எப்படின்னு வசனம் பேசட்டும்'

அனானி: படம் பார்க்க ஆரம்பிச்சா தன்னால பாஷை வந்துடும்

1/31/2006 5:41 PM  
Anonymous Anonymous said...

Nandhan : என்னொட நண்பணும் India வில் பர்க்கவில்லை.முதல் காட்சியில் பார்த்தான். அந்த காட்சியில் பயஙர சத்தம் என்று சொன்னான்.

By: karthikjayanth

1/31/2006 5:55 PM  
Anonymous Anonymous said...

??? இது என்ன புதுசா? கதையில கூட அப்படி இல்லையே? நான் ஒரு 2 நிமிஷம் லேட், அப்ப போட்டு இருப்பாங்களோ? நந்தன்

By: நந்தன் | nandhan

2/01/2006 7:03 PM  
Anonymous Anonymous said...

எங்க ஊர்லேயும் அந்த மாதிரி எந்த டைட்டில் கார்டையும் பாக்கலையே..

2/01/2006 8:52 PM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

எங்க ஊர்லேயும் அந்த மாதிரி எந்த டைட்டில் கார்டையும் பாக்கலையே.. நான் லேட்டும் இல்லையே.. என்ன போட்டிருந்தாங்கன்னு சொல்ல முடியுமா?

2/01/2006 8:53 PM  
Anonymous Anonymous said...

NRI எல்லாம் முட்டள் நு title card ல வருதாம்.really ?
நான் படம் பாக்கல. என்னொட friend சொன்னன்

By: நந்தன் | nandhan

2/01/2006 8:59 PM  
Anonymous Anonymous said...

அப்படின்னு karthikjayanth சொல்லியிருக்கார் பாருங்க

By: நந்தன் | nandhan

2/01/2006 9:17 PM  
Anonymous Anonymous said...

Nandhan,

my friend say the movie in US not in india. he saw last week. it seems that scene / card came some where during title card.. BTW i am not saying cinema story is not around that theme..

2/01/2006 9:27 PM  
Anonymous Anonymous said...

நந்தா, உன்னோட திரைவிமர்சன்ம் நன்றாக இருந்தது. sorry da i cudnt type as good as you,but i will keep an eye on this blogs. BTW we all are goin for the movie tonight. Have a great week end.

2/04/2006 12:29 AM  
Anonymous Anonymous said...

நந்தா, விமர்சனம் சிறபாக இருந்தது

By: Nirmal K

2/09/2006 7:56 PM  

Post a Comment

<< Home

5 புள்ளி சிலரும், கால் செண்டரில் ஒரு இரவும்.

சேத்தன் பகத்'ன்னு ஒருத்தர். இந்தியவோட மிக பெரிய கல்வி நிறுவனங்களில் படிச்சிட்டு இப்போ புஸ்தகம் எழுதிட்டு இருக்காரு.என்னவிட நிறைய படிக்கிறவங்க இங்கே இருக்கீங்க, கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.

இவரோட முதல் புத்தகம் Five point some one இந்திய அளவில ஒரு Best Seller. 3 பசங்க, ஐஐடில சேற்ராங்க. அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தவுங்கள கொஞ்சம் ஈளைப்பாற விடாம புழிஞ்சு எடுக்குது ஐஐடி. அப்பிடி இப்பிடி பாத்து முடியாம போறது இவங்களுக்கு...அப்புறம் என்ன? Freak out. அதுல வர பிரச்சனை இதுல குற்ற உணர்வு வேற. இப்படி சாதரண 5 புள்ளி கொசுறு CGPA (% மாதிரி) வச்சிருக்க 3 பசங்களோட கதைய சிரிக்க சிரிக்க சொல்லியிருப்பாரு. எனக்கு ரொம்ப பிடித்து போக என் நன்பர்களையெல்லாம் படிக்க சொன்னேன். (Rupa publications, Rs.95)


இவரோட அடுத்த புத்தகம் 'One night at the call center' வந்திருக்குன்னு தெரிஞ்சவுடனே, இந்தியால இருந்த்து வரவழைத்து படிச்சேன். ஒரு கால் செண்டரில் வேலை பார்க்கும் 5 (7ன்னும் சொல்லலாம்) சுத்தி வருது கதை. ஒவ்வோருத்தருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை. ஒரு இரவில் அவங்க வாழ்க்கை சுத்தம்மா மாறுது. அந்த் இரவில் அப்படி என்னதான் ஆச்சு? கடவுள் ஒரு கால் (Call) செய்தார்!!
என்னமோ முதல் புக்கே ரோம்ப நல்லா இருந்தா மாதிரி தோனுது.
படிக்கும் போதே, ஒரே கதையில யதார்தமாகவும், நம்பவே முடியாத படியும் ஏன் எழுதினாருன்னு யோசித்தேன்...அதுக்கு அவரே கடைசில பதில் சொன்னாரு. ஆனா அந்த பதிலும் அந்த அளவுக்கு ஒத்துக்க முடியல.


அந்த யதார்தமான பகுதிக்காக அவர பாராட்டத்தான் வேண்டும். கால் செண்டரும், தகவல் தோழில்நுட்ப நிறுவனங்களும் இன்றைய இந்திய நகரங்களில் ஒர் பெரிய கலாச்சார மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. அதில் பணி புரிபவர்களின் வாழ்க்கை அதில் உள்ள சிக்கல்கள் எல்லாம் இன்னும் எழுத்த படாத ஒன்று. தமிழ்ல ஏதாவது இருக்கா? இந்த சினிமாகாரர்களின் வாழ்கைய பத்தி நிறைய எழுத பட்டிருக்கு...மேல சொன்னவுங்க வாழ்க்கையும் கிட்டதட்ட அப்பிடி தான். என்ன சினிமா அளவுக்கு இதுல புகழ் வெளிச்சம் கம்மி, மத்தபடி இதுவும் சரிகை பேப்பர் வாழ்க்கை.

பாத்தீங்களா எங்கேயோ பொயிட்டேன்...புத்தகத்தை பத்தில சொல்லிட்டிருந்தேன்....
அவசரப்படாத இந்திய ஆங்கிலம், 300 பக்கத்துக்கு கொஞ்சம் கம்மி. 3 மனி நேரத்தில படிச்சிடலாம். 100 ருபாய் விலை. இன்றைய இளைஞர்கள் தங்களோட அடையாளம் காணக்கூடிய களம் இதெல்லாம் "+"திடிர் திடிரென மாறும் கதா பாத்திரங்கள், நம்பமுடியாத முடிவுகள் இதெல்லாம் "-".
ஆனாலும் 20-30 வயசுக்காரர்களின் பெரும் தயவால் இந்த புத்தகமும் ஒரு Best Seller ஆகிடும்னு தோனுது. பார்ப்போம்.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 3 (show/hide)

3 Comments:

Anonymous Anonymous said...

முதல் புத்தகம் 5 பாயிண்ட் சம்திங் நானும் படிச்சிருக்கேன். அது நல்லா இருக்கும். இந்தப் புத்தகமும் நல்லாப் போகுதுன்னு கேள்விப் பட்டேன். வாங்கிப் படிக்க வேண்டியதுதான்.

1/19/2006 10:31 PM  
Anonymous Anonymous said...

படிச்சிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. நன்றி.

By: nandhan

1/26/2006 5:26 PM  
Anonymous Anonymous said...

ரெண்டாவது புத்தகமும் படிச்சாச்சு. தேவலாம் வகை. ரொம்ப லேசா படிச்சிரலாம்.

கடவுள் வரவே மாட்டாருங்குறதுதான் யதார்த்தமுன்னு என்னால ஒத்துக்க முடியாது. அதுனால அதுவரைக்கும் அந்த புத்தகம் நல்லாவே இருக்கும்.

இரண்டு விஷயங்கள் -வ்வும் உண்டு.

1. கடைசியில் நடக்கும் சினிமாத்தனமான முடிவு.

2. கால்செண்டர் பணியைக் கொஞ்சம் மட்டம் எனத் தொனிக்கும் வகையில் எழுதியிருப்பது.

மற்றபடி புத்தகம் நல்லாயிருக்கு.

By: கோ.இராகவன்

1/30/2006 10:45 PM  

Post a Comment

<< Home

சென்னை புத்தக கண்காட்சி.

ஒரு திருவிழா போலவே நடக்கும் இந்த் கண்காட்சிக்கு வருடம் தவறாமல் வந்து காணிக்கை செலுத்தி போகும் அனெகரில் நானும் ஒருவன்.

சொந்த சம்பாதியத்தில் புத்தகங்களை வாங்க ஆரம்பித்த பிறகு நான் வரமுடியாமல் இருக்கும் முதல் புத்தக கண்காட்சி :( அந்த குறையை பெரியதாக்க இந்த கண்காட்சியில் என்னென்னமொ சண்டையெல்லாம் நடக்குதாமே? ஹும் I am missing it.

அதைவிட ஒரு முக்கியமான காரணமும் இருக்கு. ஏன் வாழ்க்கையில முதல் முறையா என் பெயர்/கதை அச்சில் வரபோகுது...ஆனா அதை பார்க்க நானில்லை..என்ன எப்படின்னு கேக்கறவுங்க இங்கே போங்க.

ஒப்புக்கிறேன் என்னை விட ரொம்ப நல்லா எழுதுறவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க ஆனாலும் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்' இல்லயா?

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 8 (show/hide)

8 Comments:

Anonymous Anonymous said...

indha blog nalla irukku

By: asokan

1/08/2006 5:54 PM  
Anonymous Anonymous said...

நந்தன் பாராட்டுகள். இன்னும் உங்கள் எழுத்துகள் நிறைய அச்சில் வர வாழ்த்துகள்.

1/08/2006 6:28 PM  
Anonymous Anonymous said...

1/08/2006 7:08 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள்.

1/08/2006 7:49 PM  
Anonymous Anonymous said...

Congrats!!!!!!!!! this is the first step...and u have started ur journey in the world of literature!!!!!!!!! Dream come true na!!!!!!!!!u have a long way to go...expecting a lot more from u.

1/10/2006 7:34 PM  
Anonymous Anonymous said...

Congrats!!!!!!!!! this is the first step...and u have started ur journey in the world of literature!!!!!!!!! Dream come true na!!!!!!!!!u have a long way to go...expecting a lot more from u.

By: Ramya

1/10/2006 7:35 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்திய எல்லாருக்கும் என் நன்றி. ரம்ஸ் வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.



By: நந்தன்

1/13/2006 7:12 PM  
Anonymous Anonymous said...

CONGRATS NANDHA!!EAGER TO SEE UR NAME IN THE BOOK..
SABARI

1/28/2006 3:12 AM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?