கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

நன்றி, Sign off.

இந்த ஒரு வாரம் எனக்கு ரொம்ப நல்லா போச்சு. உங்களுக்கும் அப்படியே என நினைக்கிறேன்.

முடிந்தவரை, வித்தியாசமான கருக்களை தொட்டு இருக்கிறேன். இன்னமும் என்னை வளர்த்து கொள்ள இந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருந்தது.

அடுத்த ஒரு மாதம் இந்திய பயனம் + பிஸி எனபதால், தமிழ் மணத்தில் என்னை காண முடியாது என கூறிக்கொள்கிறேன். (இல்லைனா மட்டும் என்ன வாழுதாம்ன்னு கேட்கறது காதுல விழுது..)

ஒரு வாரம் முழுதும் என் பதிவுகளை படித்து பின்னூட்டம் வாயிலாக ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி. Your opinion mattered a lot to me.

வாய்ப்பு அளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும் நன்றி. I hope I delivered upto your expectations.

மற்றபடி, படித்து பார்த்து பின்னூட்டம் இடமுடியாமல் போனவர்களுக்கும் நன்றி. நீங்கள் ஏதேனும் கருத்து கொண்டிருந்து அதை சொல்ல அப்போழுது இயலவில்லை எனில் என்னை மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். முகவரி Profile'லில்.

இனி வரும் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள்.

அனைவரும் ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதி நடைபெறும் எனது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு மீண்டும் அழைப்புடன்....


நன்றி,
Signing off,
Nandhan

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 22 (show/hide)

22 Comments:

Blogger துளசி கோபால் said...

என்னங்க நந்தன்,
ரெண்டு வாரத்துலே 'கல்யாணம்'வச்சுக்கிட்டா நட்சத்திரமா ஆனீங்க? பாவங்க. உங்களைக் கற்பனை கனவு உலகத்துலே
சஞ்சரிக்க விடாம இங்கே இழுத்துப் போட்டுட்டாங்களா நம்ம மதி?

சரிங்க. உங்களுக்கு தமிழ்மணத்துலெ இருந்து 40 நாளைக்கு லீவு சாங்ஷன் செஞ்சாச்சு. சந்தோஷமாப் போயிட்டுக்
கல்யாணம் முடிச்சுட்டு வாங்க. கல்யாணப் போட்டோக்களையும் எங்களுக்கு அனுப்புங்க. நேரில் வரமுடியாட்டாலும் படத்துலேயாவது
பார்த்துக்கறோம்.

அருமையான மணவாழ்க்கை அமையணுமுன்னு மனமாற வாழ்த்துகின்றோம். உங்க ரெண்டு பேருக்கும் எங்கள் அன்பு.
நல்லா இருங்க.

இப்படிக்கு,
துளசி & கோபால்

5/21/2006 9:13 PM  
Blogger நன்மனம் said...

advance vazhthukkal Nandhan.

Good week.

Continue giving more info abt information processing

5/21/2006 9:26 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி நன்மனம்,

விக்கிபீடியா நன்பர்களின் ஆலோசனைப் படி டெக்னிகல் சமாசாரங்களை அங்கு எழுதலாம் என்று இருக்கிறேன். முடியுமானால் இங்கேயும் மறு பதிவோ/சுட்டியோ இடுகிறேன்.

எதுவாயினும் இன்னும் 1 மாதம் கழித்து தான்.

5/21/2006 9:36 PM  
Blogger வெற்றி said...

நந்தன்,
அருனையான பல படைப்புக்களை நட்சத்திர வாரத்தில் வழங்கியிருந்தீர்கள்.
வாழ்த்துக்களும் நன்றிகளும். நட்சத்திர வாரம் முடிந்தாலும் நீங்கள் இன்னும் பல தரமான படைப்புக்களைத் தரவேண்டும் என் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

5/21/2006 9:36 PM  
Blogger நந்தன் | Nandhan said...

துளசி அக்கா,

ஆசிகளுக்கு நன்றி.

மதி, முன்னமே தான் கேட்டார்கள் நாந்தான் இந்த வாரத்தை தேர்ந்தெடுத்தேன். :)

முதல் பதிவுக்கும், கடைசி பதிவுக்கும் கரெக்டா வந்துடீங்க. பின்னுட்ட ராணியிடமே மத்த பதிவுகள் கவனம் பெறவில்லை என்பதில் சற்றே மனவருத்தம் தான். இன்னும் போகனும்...

5/21/2006 9:41 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி வெற்றி.

//நீங்கள் இன்னும் பல தரமான படைப்புக்களைத் தரவேண்டும் //

இதுல உள்குத்து ஏதும் இல்லையே? நானெல்லாம் டீயுப் லைட்டுங்க,


//பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//

ஆகா இப்போ விளங்கிடுச்சு இதுலே என்னமோ இருக்கு. சரியா பாடற வரை விடாத பாகவதர் கதையா?

Jokes apart,

நன்றி வெற்றி. கண்டிப்பாய் முயற்சி செய்கிறேன்

5/21/2006 9:45 PM  
Blogger Kasi Arumugam said...

நந்தன், மணவாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

5/21/2006 9:48 PM  
Blogger துளசி கோபால் said...

அட, இது என்ன? கல்யாண மாப்பிள்ளை இப்படிக் 'கண்' கலங்கலாமா?
அதான் வந்து படிச்சுட்டு ஓடிக்கிட்டு இருந்தேன்.
ஊட்டம் போட முடியாம 'கல்யாண வேலைகள்'குமிஞ்சு போச்சுன்னு
ஒரேடியா அடிச்சு விட்டுறலாமா?:-)))))

(அக்காவோட திருமணநாள் ஜூன் 5. பலவருசங்களுக்கு முந்தி.
நம்ம குடும்பத்துக்கு ஜூன் மாசம் ராசியான மாசமப்பா)

5/21/2006 9:52 PM  
Blogger நந்தன் | Nandhan said...

காசி,
நன்றிகள்.

குமரன் எண்ணம். மிக்க நன்றி. பதிவு தவறாமல் படித்து பின்னூட்டம் இட்டு ஊக்கப் படுத்தியதற்கும் சேர்த்து

5/21/2006 10:14 PM  
Blogger நந்தன் | Nandhan said...

துளசி அக்கா,
கண் கலங்கல, கண்ணாடி தான் களங்கிடுச்சு ;)

//'கல்யாண வேலைகள்'குமிஞ்சு போச்சுன்னு ஒரேடியா அடிச்சு விட்டுறலாமா//

அது சரி, என் கல்யாணத்துக்கு வேலை செய்யாத ஒரே ஆளு நான் தான் போல. ஊர்ல எல்லாரும் பரபரப்பா இருக்க நான் இங்கெ நேரம் கடத்திகிட்டு இருக்கேன் .

June 5? Belated wishes.

5/21/2006 10:14 PM  
Blogger வெற்றி said...

//இதுல உள்குத்து ஏதும் இல்லையே? நானெல்லாம் டீயுப் லைட்டுங்க,//

அய்யோ! நந்தன் , எனக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் கிடையாது ஜயா. உண்மையிலேயே என் மனதில் இருந்து வந்த உண்மையான வார்த்தைகள்தான்.

நந்தன், முன்னைய பின்னூட்டத்தில் திருமண வாழ்த்துச் சொல்ல மறந்துவிட்டேன்.

உங்கள் மண வாழ்வில் பல் வளமும் பெற்று நலமுடன் வாழ உங்களுக்கும் உங்கள் வருங்கால துணைவியாருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

5/21/2006 10:19 PM  
Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் நந்தன். இனிய மணவிழாவிற்கும் ஒரு வாரம் தமிழ்மண விண்மீனாயிருந்ததற்கும்...

5/22/2006 2:42 AM  
Blogger மணியன் said...

மணவிழா காண இருக்கும் இருவருக்கும் ஐயனின் அன்பும் அறனும் உடைத்தாய இல்வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். ஒருமாதம் கழித்து புத்துயிருடன் மீண்டும் மீண்டும் கலக்குங்க !

5/22/2006 5:56 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

நட்சத்திரக் கிழமைக்கு நன்றியும் வாழ்த்தும்.

5/22/2006 6:43 AM  
Blogger Madhu Ramanujam said...

என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் நந்தன்...

5/22/2006 3:01 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

திருமண வாழ்த்துக்கள்... துளசி அக்காவே லீவ் கொடுத்துட்டாங்களே.. நல்லா ஓய்வெடுங்க.. :).. மீண்டும் சீக்கிரம் வாங்க, கண்ணாடியோட..

5/22/2006 8:34 PM  
Blogger நந்தன் | Nandhan said...

வெற்றி நான் சும்மா விளையாடுனேங்க. சீரியஸா எடுத்துக்காதீங்க.

வாழ்த்துக்கு மிக்க நன்றி,

குமரன், வசந்தன் - மிக்க நன்றி. தவறாமல் வந்து வாசித்தற்கும்

5/22/2006 9:04 PM  
Blogger நந்தன் | Nandhan said...

மனியன், மது.
நன்றிகள்

பொன்ஸ், நன்றி. டீச்சர் லீவு கொடுத்தாச்சுனா அப்பீலே கிடையாது.

இந்த புதன் கிளம்புறேன்.

5/22/2006 9:06 PM  
Blogger தருமி said...

இனிய திருமண விழா கண்டிருப்பீர்கள். வரப்போகும் இல்வாழ்க்கையில் நலம் பலவும் பெற்று பல்லாண்டி இனிய வாழ்க்கை காண வாழ்த்துக்கள்.

6/12/2006 12:50 AM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி தருமி. ஒரு வழியா வீடெல்லாம் செட்டில் ஆகியாயிற்று. இதோ இனி மீண்டும் தொடர்ந்து தமிழ்மணத்தில் உலாவ வேண்டியது தான்

7/05/2006 6:29 PM  
Blogger கோவி.கண்ணன் said...

மோகம் முப்பது நாள் முடிஞ்சி போச்சா .? திடீர்னு வலைப் பக்கம்.
காதல் வலை மடங்கி இருக்கும் கொஞ்சம்
கணனியிலும் வலைவிரிப்போம் என்றா ? :)))
செவிக்கு உணவில்லாத போது ... அந்த பாணியில் எழுத நெனெச்சேன் கொஞ்சம் செதப்பலாகிடுச்சி

7/06/2006 10:36 PM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

செட்டில் ஆகிவிட்டீர்களா? வாங்க வாங்க மீண்டும் வந்து கலக்குங்க என்று உங்களை அன்புடன் அழைக்கிறேன்....

7/06/2006 10:49 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?