பாடல் தொகுப்பு அருமையாக இருக்கிறது. தமிழ்ச்சினிமா பார்த்தது போலவே இருக்கிறது.
ரொம்ப நல்லா இருக்கு, யாரிதை செஞ்சதுன்னு தெரியலையே..ஒருவேளை shrek தமிழில் எடுத்திருக்காங்களோ?
வசந்தன்,
பல தமிழ்(ச்?)சினிமா பாடல்களை விட நல்லாவே இருக்கு. அதுவும் கண்ணாடி உடைந்த பிம்பங்கள் இங்கேயும் அங்கேயும் மாறி வருவது, நெருப்பில் இங்கெ முடியும் ஷாட் அங்கெ நெருப்பிலே தொடங்குவதென, முழு ப்ரெபஷ்னல் டச்.
எனக்கென்னமோ பாடல் புலம் பெயர்ந்த ஈழத்தவரின் ஆல்பம் போல இருக்கிறது...
ஜீவா,
அதையும் தான் தேடி பார்த்தேனே, அப்படி ஒரு தகவலும் இல்லை. படத்தின் ஆங்கில மூலத்தில் அப்படி ஒரு பாடலே இல்லை.
சொல்லப்போனால், இந்த அனிமேஷன் பட கம்பெனிகள் தமிழிலும் படத்தை டப் செய்து வெளியிடலாம்...அதற்காக ஆகும் செலவை பார்க்கும் போது வரும் வருமானம் (potential market) மிகப் பெரியதே!
வருகைக்கு நன்றி.
தமிழ்"ச்"சினிமாவே தான். அதிலென்ன குழப்பம்?
எனக்கென்னவோ "அழகாய் இருக்கிறாய், பயமாயிருக்கிறது" படக்குழுவின் வேலையோ என்றும் தோன்றுகிறது. ஏனென்றால் அந்தப்படத்திலும் நிறைய அனிமேஷன் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆகா! என் 12 மனி நேர சந்தேகத்தை தீர்த்த ஜீவ புலவரே! பிடியுங்கள் நன்றியை.
இது கிடைத்த பின், YouTubeல் ஆரய்ந்த போது, நிறையவே ஈழத்தவரின் ஆல்பங்கள் கேட்டேன்...பல இது போன்றே இருந்த்து.
ஆனாலும் நம்ம யுவன் பற்றிய சந்தேகம் இருந்த்து!
வசந்தன்,
எனக்கு இந்த ஒற்று மிகுதி, ன/ண எப்போழுதுமே தகராறு. எப்படி சரி செய்வது என ஏதேனும் சுட்டி இருந்தால் மின்னஞ்சல் செய்யுங்களேன்.
உங்கள் சந்தேகம் ஜீவாவின் பின்னூட்டத்திற்கு பிறாகா?
நன்றாயுள்ளது.
அட்டகாசம். போங்க. அருமை
மிகவும் நேர்த்தியாகத் தொழில்நுட்பத்துடன், குறைபாடே காணமுடியா வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது, இந்த ஆல்பம். நீங்கள் சொன்னபடி, நிச்சயம் இந்ததுறையின் சினிமா ஆளுமை மிக அதிகமாக வாய்ப்பிருக்கிறது. சந்தைப்படுத்தி இறங்கினால் நிச்சயம் அள்ளலாம்.
சத்தமாய் விழும் வார்த்தையின் போதையில் 'எல்லா உண்மையும் நான் சொல்லவது மட்டுமே!' என்ற மாயத்தோற்றம் வேறு வந்தாட்கொள்கிறது. சுவறில் பெரிதாய் விழும் நிழலே நான் என்பது போன்ற காட்சி மயக்கம். பெரியதாய் ஆஜானுபாகுவாய் தெரிந்தாலும் நிழலின் நிறம் கருப்புதானே, இது ஏனோ அப்போழுது புரிவதில்லை.நந்தகுமார், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் முடிவில் மெளனமாக இருந்திருக்கலாமோ என்று எண்ணிய வேளையில் உங்கள் பதிவு அப்படியே என் எண்ண பதிவுகளை படம் பிடித்து காட்டுவது போல் அமைந்துள்ளது.
இதுவும் ஒரு சுகமான சுமை தானோ.
ஸ்ரீதர்
நன்றி ஸ்ரீதர்.
பல சமயம் தவறுகளை திருத்த முயற்சித்தாலும் வெற்றி பெற முடிவதில்லை. தவறுகளும் நம்மில் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்ளும் பக்குவும் வரும்போது அவை சுமைகளாய் தெரிவதில்லை. அப்படி நம்மை புரிந்தவர்கள் இருக்கையில் வாழ்கையும் இலகுவாகிறது.
sittukuruvikku நன்றி. தமிழ் அருமையெல்லாம் ரொம்ப அதிகம்...ஒருவேளை கரு மனசுக்கு பக்கதில இருக்கறதால அப்படி தோனிச்சோ?
when hearts are near words will never matter!!!thanks a lot!!
hola, saludos desde Chile
MIGUEL,
Saludos. ¿Puede usted leer esto?
ச்சும்மாவாச் சொல்லி இருக்காங்க, 'எத்தாலே கெட்டே? 'ன்னா 'நோராலே கெட்டேன்'ன்னு.
நோரு= வாய்( தெலுங்கு)
நன்று!
impulsive decision/reaction ஐ பல நேரங்களில் தவிர்க்க இயலாது. அப்படி தடுத்தாளும் திறன் இருக்கும் பட்சத்தில் அனைவரின் மனதையும் வெல்லலாம் அன்பினால்...
அக அன்பின் வழி வளர்ந்த உறவுகளே அரவணைக்கும் என்பதும் உண்மை!
துளசி அக்கா, மலையாளம் மட்டும் தான்னு நினைச்சேன். சுந்தர தெலுங்குமா?
ஹும், நீங்க சொல்றதும் சரிதான். பல விஷயங்களாலில் பேசாமல் இருப்பதும் நல்லதே.
வருகைக்கு நன்றி.
Pot"tea" kadai,
Impulsive decisions மட்டுமில்லை எல்லாவகையான கொபங்களையும் தான் சொல்றேன். பிரோயஜனமில்லாத விஷயங்களுக்கு கூட சிலர் (நான் உட்பட) கோவபடுகிறோம். ஒவ்வொரு தடவையும் அதை மாற்ற முயற்சிக்கிறேன் :(
ஏதோ, அன்பின் உறவுகள் உடனிருப்பதால் இன்னமும் ஓடுகிறது வாழ்க்கை. அவர்களுக்கே இது.
நந்தன், உங்களின் இந்தப் பதிவிற்குத் தூண்டுதலாய் இருக்க முடிந்ததில் மகிழ்ச்சி. காரணம், கருத்தும் சரி, நடையும் சரி, மிகவும் அருமையாக இருக்கிறது.
நிச்சயமாய் உணர்ச்சிகளின் கட்டுக்குள் ஆட்படாமல் அவற்றை நமது கட்டுக்குள் வைத்திருப்பதுவே நன்மை பயக்கும். அன்புடையோரைப் புண்படுத்தாதிருக்கும். நின்று நிதானமாய் யோசிப்பதில் பயனி்ருக்கிறது. இத்தகு பதிவை எழுதிய நீங்கள் அதில் குறிப்பிட்டிருக்கும்படி நடந்திருக்கிறேன் என்றால் நம்பச் சிரமமாகவே இருக்கும்.
நன்றி செல்வா.
ஹூம், தவறுகளை உணர முயற்சிக்கிறேன். முதல் படியில் தான் உள்ளேன். திருந்தியவனாக மாற நிறைய தூரம் போக வேண்டியுள்ளது.
என்னைப் போலவே பலர் என்ற எண்ணம் எழுகிறது. எப்படி உங்களுடைய பதிவு எனக்குள்ளே ஒரு எண்ண ஓட்டத்தை உருவாக்கியதோ அப்படி இதுவும் ஒரு சிலர்க்கு உருவாக்கட்டும் என எழுதினேன்.
மீண்டும் வாருங்கள். வாழ்க்கையின் புரிதலை பகிர்வோம்
தெலுங்குதாங்க 'தாய்'மொழி.
அதான் தமிழ் கொஞ்சம் தகராறுன்னு சொன்னேன்.
இட ஒதுக்கீட்டு என்ன செய்தது?
விட்டு போன ஒரு வாதம்.
சாதி ரீதீயான ஒதுகீட்டை எதிர்க்கும் எத்தனை பேர் பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை ஆதரிகிறீர்? எப்படி நூற்றாண்டுகளை பெண்கள் அடிமைபடுத்தபட்டு, வாய்ப்புகள் மறுக்கபட்டனர் என்பது உன்மையோ அதேபோல் தான் தா.சாதியினரும். அப்படியிருக்க ஏன் இந்த பாரபட்சம்?
நல்லதொரு பதிவு. இன்னும் ஆழமாய் அலசியிருக்கலாம். ஆனாலும் இப்போதெல்லாம் இட ஒதுக்கீடு குறித்து அலசும் பதிவுகள் அதிகமாகி விட்டன. உண்மையிலேயே இட ஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டம் வந்து விட்டதோ? (அதாவது இட ஒதுக்கீடு முறையில் மாறுதல் செய்ய)
உங்களது எழுத்துருவில் பிரச்சனை இல்லை. Settings சென்று Encodingஐ UTFக்கு மாற்றுங்கள், சரியாகிவிடும்
நந்தன்,
//விட்டு போன ஒரு வாதம்.
சாதி ரீதீயான ஒதுகீட்டை எதிர்க்கும் எத்தனை பேர் பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை ஆதரிகிறீர்? எப்படி நூற்றாண்டுகளை பெண்கள் அடிமைபடுத்தபட்டு, வாய்ப்புகள் மறுக்கபட்டனர் என்பது உன்மையோ அதேபோல் தான் தா.சாதியினரும். அப்படியிருக்க ஏன் இந்த பாரபட்சம்?//
அங்கேயும் ஒரு விஷயம் இடிக்குது. சோ மாதிரியான ஆட்கள் "எங்கே இப்படி ஒரு கேள்வி வந்துவிடுமோ" என்றே பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஆதரிப்பது இல்லை.
நன்றி மாயவரத்தான், KVR.
//நல்லதொரு பதிவு. இன்னும் ஆழமாய் அலசியிருக்கலாம்.//
உன்மைதான். நீங்கள் சொன்னது போலவே நிறைய பேர் நிறைய பேசியிருக்கிறார்கள். இது அப்படி பட்ட ஒரு பதிவில் பின்னூட்டம் இடப்போய் சட்டென மனதில் தோன்றியதை எழுதினேன்.
KVR,
// சோ மாதிரியான ஆட்கள் "எங்கே இப்படி ஒரு கேள்வி வந்துவிடுமோ" என்றே பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஆதரிப்பது இல்லை. //
சிலரை திருத்தவே முடியாது!:(
மற்றபடி ஒதுக்கீடு முறைய மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உடனடியாய் இல்லை என்பது என் அப்பிபிராயம்.